அன்பின் எல்லை என்று ஒரு நாவல் நான் சிறு வயதில் படித்தது.மிகவும் விரும்பி பல முறை படித்த ஒன்று. எழுதியவர் த நா குமாரசுவாமி அவர்கள். மிகவும் எளிமையான நடையில் அன்றைய கல்யாண வைபோகங்களை பற்றியும் முதன் முறையாக ஒரு புது பெண் அவள் புகுந்த வீட்டுக்கு போகும் பொழுது எதிர் கொள்ளும் புதிய நிகழ்வுகள் ஒவ்வாமை முதலியவை பற்றி அருமையாக வர்ணிக்கபட்டு இருக்கும். சுந்தரராமன்,சீதா கதாபாத்திரங்கள் இன்னும் என் மனதை விட்டு நீங்காதவை.அன்றைய காலகட்டத்தில் புகுந்த வீட்டில் ஒரு பெண்ணுக்கு எத்தனை சுதந்திரம் இருந்தது,மூன்று நாட்கள் நடக்கும் கல்யாண வைபோகங்கள் போன்றவற்றை அருமையாக விவரித்து இருப்பார் நாவலாசிரியர். அந்த புத்தகம் இன்றும் தேடுகிறேன் கிடைக்கவில்லை, யாரவது முயற்சி செய்து கிடைக்கும்படி செய்யவும்.
கதைக்கு தக்கவாறு அழகான ஓவியங்கள் வரைந்த ஓவியரின் பெயர் நினைவில்லை.
Saturday, October 29, 2011
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment