நீண்ட இடைவேளைக்கு பிறகு இந்த இழையில். கடந்த இரண்டு ஆண்டு இடைவெளியில் நிறைய நடக்ககூடாத நிகழ்வுகளால் இந்த இழையை தொடர முடியவில்லை.
https://vr-alaymanlostinmusic.blogspot.com/2021/03/a-myth-about-early-70s-tamil-film-music_23.html
மேற்குறிப்பிட்ட சுட்டியியை படித்து விட்டு இந்த இழையை தொடருவோம்.
1974 ஆம் ஆண்டு இரண்டாம் பாகத்தில் மன்னர், எம்ஜிஆர், வி குமார் மற்றும் வாணி ஜெயராம் அவர்களின் பங்களிப்பை பார்ப்போம் என குறிப்பிட்டு இருந்தோம். யாரும் நினைக்கவில்லை, தற்போது வாணி அவர்கள் நம்மிடையே இல்லை என்பதை :-(.
வாணி ஜெயராம் :
தீர்க்க சுமங்கலி என்ற படத்தில் இடம் பெற்ற 'மல்லிகை என்ன மன்னன் மயங்கும்' என்ற பாடலுடன் (முன்னமே தமிழில் பாடி இருந்தாலும்) தமிழக இசை ரசிகர்கள் மனதில் குடி கொண்டார் வாணி அவர்கள்.
இதில் ஆரம்பித்த அவர் இசை பயணம் அந்த வருடத்திலேயே இன்னும் பல அருமையான பாடல்களை கேட்க நாம் கொடுத்து வைத்துஇருந்தோம்.
'எங்கம்மா சபதம்' ஜே கே வெங்கடேஷ் இசையில் 'அன்பு மேகமே இங்கு ஓடி வா', 'திக்கற்ற பார்வதியின்' சிட்டி பாபு அவர்களின் இசையில் இரண்டு பாடல்கள், 'சிரித்து வாழ வேண்டும்' 'தங்கப்பதக்கம்' என்று அவருடைய பயணம் தொடர்ந்தது.
வி குமார்
குமார் அவர்களுக்கு இந்த வருடம் கொஞ்சம் இறங்கு முகம். 'அவளும் பெண் தானே, ஒண்ணே ஒண்ணு கண்ணே கண்ணே கண்ணு, தாய் பாசம் போன்ற படங்களுக்கு இசை அமைத்தாலும் அவர் தனித்து தெரிந்தது 'ராஜ நாகம்' படத்தில் ' தேவன் வேதமும்' மற்றும் ' மாணவன் நினைத்தால்' பாடல்களில்.
எம்ஜிஆர்
'நேற்று இன்று நாளை' மற்றும் 'சிரித்து வாழ வேண்டும்' ' உரிமைக்குரல்' என வெற்றிப்படங்கள் எம்ஜிஆர் நடித்தவை. நடிகர் அசோகன் சொந்த தயாரிப்பில் வந்த 'நேற்று இன்று நாளை' படத்தில் அனைத்து பாடல்களும் அருமை. இளமையான பாலுவின் குரலில் 'பாடும் போது நான் தென்றல் காற்று' 'அங்கே வருவது யாரோ' , பாடகர் நிலைகளும் தன பங்கிற்கு ' நீ என்னனென்ன சொன்னாலும் இனிமை' என கொஞ்ச, நமக்கு கிடைத்ததோ மெல்லிசை மன்னர் கொடுத்த அற்புதமான பாடல்கள்.
பாடலின் ஆரம்பத்தில் வரும் துள்ளல் இசையும், பாலு மற்றும் ஜானகியின் இளமையான ஹம்மிங்...
அடுத்து எஸ் எஸ் பாலன் அவர்கள் இயக்கத்தில் வந்த 'சிரித்து வாழ வேண்டும்' படத்தின் பாடல்கள். அற்புதமான சாரங்கா ராகத்தில் அமைந்த 'கொஞ்ச நேரம் என்னை மறந்தேன்' பாடலில் நம்மை எல்லாம் மறக்க வைத்தார் மெல்லிசை மன்னர். வாணி அவர்களின் குரலில் 'பொன்மன செம்மலை புண்பட செய்தது யாரோ' அருமையான மெலடி.