Friday, November 18, 2011

முகநூல் இணைப்புகள்

முகநூல் ஒரு அருமையான இணைப்பு வட்டம் என்பதை மறுபடியும் நிருபித்தது. எத்தனை அருமையான அன்புமிக்க மனிதர்களுடன் என்னை இணைதிருக்கிறது என்பதற்கு சிறந்த அடையாளகம எழுத்தாளர் முருகானந்தம்,எழுத்தாளர் வெங்கடேஷ் ராமகிருஷ்ணன் ஆகியோரை நேரில் சந்தித்து அளவளாவும் பாக்யம் கொடுத்து இருக்கிறது. எழுத்தாளர் முருகானந்தம் அவர்களின் அன்புக்கு நான் என்றும் கடமை பட்டு இருக்கிறேன். இந்த பட்டியலில் முக நூலில் என் அண்ணா திருவாளர் சேஷாத்ரி நாராயணன் அவர்களையும் சந்திக்க வைத்தது. நமக்கு பிடித்த சில விஷயங்களை நமக்கு பிடிதவர்குளுடன் சேர்ந்து செய்யும் பொழுது கிடைக்கும் ஆனந்தம் அளவில்லாதது. அவ்வாறே சேஷாத்ரி நாராயணன் அவர்களுடன் திருபதி
பயணம் இறைவன் தரிசனம் ஆனந்தம் ஆனந்தம். அண்ணா உங்கள் அன்புக்கு என்றும் அடிபணிய ஆசை. அடுத்து என் அன்பு பட்டியலில் இருக்கும் ஆன்றோர் சான்றோர்கள் திருவளர்கள் கிருஷ்ணமுர்த்தி கிருஷ்ணையர், ஓவிய மேதை ஜீவா நந்தன் மற்றும் சமய சஞ்சீவி எஸ் எச்செஸ் பீ. இவர்களை சந்திக்கும் தருணத்துக்காக காத்து இருக்கிறேன்.

எப்போ வருவரோ எந்தன் கலி தீர்க்க