திங்கட்கிழமை இரவு நண்பர் பாஸ்கரன் சிவராமன் கை பேசியில் அழைத்து இருந்தார். அண்ணா சௌக்கியமா என்றேன். அவர், என்னய்யா நேற்று 21st ஜூலை சிவாஜி பத்தி எதுவும் பதிவே போடலை என்றார். நான், எழுதி வைத்து இருந்தேன், கொஞ்சம் நேரம் கிடைக்கவில்லை மற்றும் நான் இன்னும் வாலி அவர்களின் hangover லேயே இருந்து விட்டேன் என்றேன். நேற்று, செவ்வாய் காலை எழுந்தவுடன் தின தந்தியில் மஞ்சுளா அவர்கள் கட்டிலில் இருந்து விழுந்து அடி பட்டதால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார் என்ற செய்தி படித்தேன். அந்த செய்தியில் அவர் நிலைமை கவலைக்கிடம் பற்றி எந்த விவரமும் இல்லை. அவர் விரைவில் குணமாகட்டும் என்று என்னுடைய காலை பூஜையில் வேண்டிகொண்டு அலுவலகம் சென்றேன். காலை ஒரு meeting ,முடித்து விட்டு வேலை செய்து கொண்டு இருந்தபோது நடிகை குஷ்பு ட்விட்டெரில் மஞ்சுளா அவர்கள் இருந்த போன செய்தியை பதிவிட்டு இருந்தார். திக்கேன்றது. உடனே வலையில் தினகரன் தினமலர் போன்ற தளங்களில் தேடினால் ஒரு விவரமும் இல்லை. குழப்பம். சில வினாடிகளில் அந்த செய்தி உண்மை என்று தகவல் தொடர்பாளர் நிகில் முருகனும் த்விட்டேரில் உறுதி செய்தார். மனம் பின்நோக்கி பறந்தது. இந்த அழகிய தமிழ் மகளை பற்றி.
இறைவன் ஒரு நாள் உலகை காண என்று பாடி திரிந்து திரை உலகில் அறிமுகமான இவரை, பொன் மன செம்மல், ரிக்க்ஷாக்காரன் படத்தில் அழகிய தமிழ் மகள் ஆக்கினார். அதன் பிறகு இவருக்கு தமிழ் மற்றும் தெலுங்கு பட உலகில் ஏறு முகம் தான். ராஜகுமாரி, பத்மினி, வைஜயந்திமாலா, காஞ்சனா, பிறகு இவர் இன்னொரு கனவு கன்னி. 70 களில்,எங்கள் உயர்நிலை பள்ளி நண்பர்களிடையே வெகு பிரசித்தம் இவர். ஷர்மிளா டாகூர் கொண்டை தலை ஸ்டைல் இவரின் style quotient. இவருக்கு அமைந்தன அருமையான பாடல்கள். அழகிய தமிழ் மகள், நிலவு ஒரு பெண்ணாகி ,ஒருவர் மீது ஒருவர் சாய்ந்து, பொன்னந்தி மாலை பொழுது,மலரே குறிஞ்சி மலரே, மல்லிகை முல்லை பூப்பந்தல்,நாளை நாளை என்றிருந்தேன், மாலையிட்டான் ஒரு மன்னன், அம்மானை அழகு மிகு கண் மானை, அங்கே வருவது யாரோ, போன்ற பாடல்கள் இன்றும் என்றும் இவரை நினைவுபடுத்துகின்றன.
ரசிகர்கள் மயங்கினர் இவரிடம், ஆனால் இவரோ உன்னிடம் மயங்குகிறேன் என்று விஜயகுமாரிடம் மயங்கி திருமணம் செய்து கொண்டார்.
இவர் மறைவு தமிழ் திரை உலகத்திற்கு இன்னொரு இழப்பு. இவரை பிரிந்து வாடும் குடும்பத்தாருக்கு இக்குழு தங்கள் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து கொள்கிறது