Friday, October 28, 2011

ஒவ்வாமை



உலகத்தில் ஒவ்வாமை நிறைய உண்டு. நம் வாழ்க்கையில் ஒவ்வாமை வரும் தருணங்கள் உடல் ஒவ்வாமை. அது வந்தால் உடன் மருத்துவரிடம் சென்று மருந்து மாத்திரைகள் சாப்பிட்டு விட்டு என்ன விதமான உணவுகள் நமக்கு ஒவ்வாமை என்று தெரிந்து கொண்டு அதை எல்லாம் விளக்க முயல்கிறோம். இதையே வாழ்க்கையில் நம் துணை வருபவளிடமோ,கூட பிறந்தவர்களிடமோ இல்லை மற்ற உறவினர்களிடமோ வந்தால் நாம் உடனே ஏன் அதை ஊதி பெரிதாக்கி சண்டை இட்டு கொள்கிறோம். நம் உடலுக்கு என்று வரும் பொழுது வரும் அந்த சுயநலம், நம் உடல் நன்றாக இருக்க வேண்டும் என்று இருக்கும் நினைப்பு ஏன் இந்த தருணங்களில் வருவதில்லை? இந்த ஒவ்வாமைகளையும் இப்படி ஒரு மருத்துவ ரீதியில் கணித்து களைய முற்பட்டால், எதனை சண்டை சச்சரவுகள்,மன வருத்தங்கள், கணவன் மனைவிக்குள்ளே வரும் கோப தாபங்கள் தவிர்க்க முடியும். என் பார்வையில், முக்கால்வாசி விவாகரத்து விவகாரங்கள் ஒவ்வாமை என்று பட்டியலட்பட்டு இரண்டு பெரும் விலகுகிறார்கள். 




No comments: